திருக்குறள்
திருக்குறள் ( Thirukkural ) எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும்.
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்
இதனை இயற்றியவர் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த திருவள்ளுவர் ஆவார்.
திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்வில் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
நூலின் அமைப்பு
அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது இந்நூலின் மொத்தமான நோக்கு.
இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது.
திருக்குறள் வரலாறு
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது.
மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது.
இதன் அடிப்படையில், “திருவள்ளுவர் ஆண்டு” என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
>>>திருவள்ளுவர் பற்றிய அறிய தகவல்கள்>>>
பிற பெயர்கள்
- உத்தரவேதம்
- பொய்யாமொழி
- வாயுரை வாழ்த்து
- தெய்வநூல்
- பொதுமறை
- முப்பால்
- தமிழ் மறை
- ஈரடி நூல்
- வான்மறை
- உலகப்பொதுமறை
உலகப்பொதுமறை
திருக்குறளில் கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகப் பொது மறை” என்றும் அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டுக் குறள்கள்.
- “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு.” (திருக்குறள் – 423)
- “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
- கண்ணென்ப வாழும் உயிர்க்கு.” (திருக்குறள் – 392)
- “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
- இடுக்கண் களைவதாம் நட்பு.” (திருக்குறள் – 788)
திருக்குறளும் எண் குறித்த தகவல்களும்
திருக்குறளின் 3 பால்களும், ஒவ்வொன்றிலும் 34 (பாயிரவியல் நீக்கி) , 70, 25 என்ற எண்ணிக்கையான அதிகாரங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டு, அந்த எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 7 என்ற கூட்டெண் வரும் விதத்திலும் நூல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டு மொத்த அதிகாரங்களான 133 இன் எண்களைக் கூட்டினாலும், கூட்டெண் 7ஆக வரும் விதத்திலேயே நூல் அமைக்கப்பட்டு்ள்ளது. ஒட்டு மொத்தத்தில், திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது.
இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அது எது என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை.
மற்றைய புறத்தில், திருக்குறளின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களும் என்ன அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன, அவைகள் ஏதாவது போதனை அடிப்படையில்தான் வைக்கப்பட்டுள்ளனவா, இல்லையா என்பது பற்றியும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு, சரியான முடிவுக்கு வரப்படவில்லை.
திருக்குறள் நூற் பிரிவுகள்

திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.ஆனால், குறளின் அதிகாரங்கள் ஏன் 10 குறள்களைக் கொண்டுள்ளன என்பதற்கான விளக்கத்தினை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை.
திருக்குறள் நூற் பிரிவு அட்டவணை
திருக்குறள் நூற் பிரிவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
அறத்துப்பால் (1-38)
பாயிரம்
- 1. கடவுள் வாழ்த்து
- 2. வான் சிறப்பு
- 3. நீத்தார் பெருமை
- 4. அறன் வலியுறுத்தல்
இல்லறவியல்
- 5. இல்வாழ்க்கை
- 6. வாழ்க்கைத் துணைநலம்
- 7. மக்கட்பேறு
- 8. அன்புடைமை
- 9. விருந்தோம்பல்
- 10. இனியவை கூறல்
- 11. செய்ந்நன்றி அறிதல்
- 12. நடுவுநிலைமை
- 13. அடக்கம் உடைமை
- 14. ஒழுக்கம் உடைமை
- 15. பிறன் இல் விழையாமை
- 16. பொறை உடைமை
- 17. அழுக்காறாமை
- 18. வெஃகாமை
- 19. புறங்கூறாமை
- 20. பயனில சொல்லாமை
- 21. தீவினை அச்சம்
- 22. ஒப்புரவு அறிதல்
- 23. ஈகை
- 24. புகழ்
துறவறவியல்
- 25. அருள் உடைமை
- 26. புலால் மறுத்தல்
- 27. தவம்
- 28. கூடா ஒழுக்கம்
- 29. கள்ளாமை :
- 30. வாய்மை
- 31. வெகுளாமை
- 32. இன்னா செய்யாமை
- 33. கொல்லாமை
- 34. நிலையாமை
- 35. துறவு
- 36. மெய் உணர்தல்
- 37. அவா அறுத்தல்
ஊழியல்
- 38. ஊழ்
பொருட்பால் (39-108)
அரசியல்
- 39. இறைமாட்சி
- 40. கல்வி
- 41. கல்லாமை
- 42. கேள்வி
- 43. அறிவுடைமை
- 44. குற்றம் கடிதல்
- 45. பெரியாரைத் துணைக்கோடல்
- 46. சிற்றினம் சேராமை
- 47. தெரிந்து செயல்வகை
- 48. வலி அறிதல்
- 49. காலம் அறிதல்
- 50. இடன் அறிதல்
- 51. தெரிந்து தெளிதல்
- 52. தெரிந்து வினையாடல்
- 53. சுற்றம் தழால்
- 54. பொச்சாவாமை
- 55. செங்கோன்மை
- 56. கொடுங்கோன்மை
- 57. வெருவந்த செய்யாமை
- 58. கண்ணோட்டம்
- 59. ஒற்றாடல்
- 60. ஊக்கம் உடைமை
- 61. மடி இன்மை
- 62. ஆள்வினை உடைமை
- 63. இடுக்கண் அழியாமை
அமைச்சியல்
- 64. அமைச்சு
- 65. சொல்வன்மை
- 66. வினைத்தூய்மை
- 67. வினைத்திட்பம்
- 68. வினை செயல்வகை
- 69. தூது
- 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
- 71. குறிப்பு அறிதல்
- 72. அவை அறிதல்
- 73. அவை அஞ்சாமை
அரணியல்
- 74. நாடு
- 75. அரண்
கூழியல்
- 76. பொருள் செயல்வகை
படையியல்
- 77. படைமாட்சி
- 78. படைச்செருக்கு
நட்பியல்
- 79. நட்பு
- 80. நட்பு ஆராய்தல்
- 81. பழைமை
- 82. தீ நட்பு
- 83. கூடா நட்பு
- 84. பேதைமை
- 85. புல்லறிவாண்மை
- 86. இகல்
- 87. பகை மாட்சி
- 88. பகைத்திறம் தெரிதல்
- 89. உட்பகை
- 90. பெரியாரைப் பிழையாமை
- 91. பெண்வழிச் சேறல்
- 92. வரைவில் மகளிர்
- 93. கள் உண்ணாமை
- 94. சூது
- 95. மருந்து
குடியியல்
- 96. குடிமை
- 97. மானம்
- 98. பெருமை
- 99. சான்றாண்மை
- 100. பண்புடைமை
- 101. நன்றியில் செல்வம்
- 102. நாண் உடைமை
- 103. குடி செயல்வகை
- 104. உழவு
- 105. நல்குரவு
- 106. இரவு
- 107. இரவச்சம்
- 108. கயமை
காமத்துப்பால் (109-133)
களவியல்
- 109. தகையணங்குறுத்தல்
- 110. குறிப்பறிதல்
- 111. புணர்ச்சி மகிழ்தல்
- 112. நலம் புனைந்து உரைத்தல்
- 113. காதற் சிறப்பு உரைத்தல்
- 114. நாணுத் துறவு உரைத்தல்
- 115. அலர் அறிவுறுத்தல்
கற்பியல்
- 116. பிரிவாற்றாமை
- 117. படர் மெலிந்து இரங்கல்
- 118. கண் விதுப்பு அழிதல்
- 119. பசப்பு உறு பருவரல்
- 120. தனிப்படர் மிகுதி
- 121. நினைந்தவர் புலம்பல்
- 122. கனவு நிலை உரைத்தல்
- 123. பொழுது கண்டு இரங்கல்
- 124. உறுப்பு நலன் அழிதல்
- 125. நெஞ்சொடு கிளத்தல்
- 126. நிறை அழிதல்
- 127. அவர் வயின் விதும்பல்
- 128. குறிப்பு அறிவுறுத்தல்
- 129. புணர்ச்சி விதும்பல்
- 130. நெஞ்சொடு புலத்தல்
- 131. புலவி
- 132. புலவி நுணுக்கம்
- 133. ஊடல் உவகை
திருக்குறள் மொழிபெயர்ப்புகள்
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் முக்கிய இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது . இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறள் பற்றிய முதல் அச்சிட்ட நூல் திருவள்ளுவர் கடல் திரட்டு அல்லது அறிவுக்கடல் ஆகும். இதனை 1794 தொகுத்தவர் லண்டனை சேர்ந்த கிண்டர்ச்லி.
1812-ல் அறத்துப்பாலை மட்டும் அச்சிட்டு வெளியிட்டவர் F.W எல்லிஸ்
பிறகு, திருக்குறள் மூலத்துடன் ஆங்கில மொழிபெயர்ப்புக் குறிப்புடன் 304 பக்கம் புத்தகம் ஒன்று வெளியானது.
- லத்தின் மொழியில்அச்சிடப்பட்ட ஆண்டு 1730
- பிரெஞ்ச் மொழியில் அச்சிடப்பட்ட ஆண்டு 1767
- தெலுங்கு மொழியில் அச்சிடப்பட்ட ஆண்டு 1887
- மலையாள மொழியில் அச்சிடப்பட்ட ஆண்டு 1915
- சமஸ்கிருத மொழியில் அச்சிடப்பட்ட ஆண்டு 1922
- ஹிந்தி மொழியில் அச்சிடப்பட்ட ஆண்டு 1924
திருக்குறள் பற்றி சுவையான தகவல்கள்

- திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
- திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
- திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
- திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
- திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
- திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி
- திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது “பற்று” – ஆறு முறை.
- திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
- திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் – என்பது கடவுளை குறிக்கிறது)
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
- திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
- திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
- எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
- திருக்குறள் இதுவரை 80 -க்கு மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.
- திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
- திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறள் உரைகள்

பழங்காலத்தில் இதற்குப் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் திருக்குறளுக்கு மு. வரதராசன், மு. கருணாநிதி, சாலமன் பாப்பையா உட்பட பலர் விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது நூலாகும்.
தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு பரிமேலழகர்
• திரு மு.வரதராசனார்
• திரு மணக்குடவர்
• திரு மு.கருணாநிதி
• திரு சாலமன் பாப்பையா
• திரு வீ.முனிசாமி
ஆங்கில உரை எழுதியவர்கள்
• Rev. Dr. G. U. Pope
• Rev W. H. Drew
• Rev. John Lazarus
• Mr F. W. Ellis
திருக்குறள் பாடல்களுக்கு அதிகாரம் ஒன்றுக்கு இரண்டு பாடல்கள் அல்லது கலிப்பா ஒன்று என்ற முறையில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் பாவுரை என்னும் நூலும் உள்ளது.
நன்றி,
விக்கிப்பீடியா
திருவள்ளுவ மாலை
திருக்குறளைப் பாராட்டும் திருவள்ளுவ மாலையென்ற ஒரு நூல் இருக்கின்றது. அதிலுள்ள செய்யுட்களைப் பல புலவர்கள் பாடியுள்ளார்கள். அந்நூலைப் பாடியவர்கள் யாராயினும் அது பல நூற்றாண்டுகட்கு முன்பே உண்டாயிற்றென்பதற்கு நேமிநாதயுரை முதலிய நூல்களில் போதிய ஆதாரம் இருக்கின்றது.
இங்ஙனம் ஒரு நூலைச் சிறப்பித்துப் பாடிய தனி நூலொன்று வேறு எந்த நூலுக்கும் முற்காலத்து அமையவில்லை
-உ வே சாமிநாதைய்யர்
No schema found.