பார்க்க பெரிய தொகை போல தெரிந்தாலும் போயிங்கின் ஆண்டு வருமானத்தில் இது ஒரு சிறு பகுதி மட்டுமே.
ஐந்தே மாத இடைவெளியில் இரண்டு விபத்துகளில் 346 பேரைப் பலிகொண்டன போயிங் 737 MAX ரக விமானங்கள். உலகை உலுக்கிய இந்த விபத்துகள் பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். தொடர் விபத்துகளின் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த விமானங்கள் பறக்க உலகமெங்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில்தான் இந்த தடை நீக்கப்பட்டு இந்த ரக விமானங்கள் மீண்டும் பறக்கலாம் எனப் பச்சைக்கொடி காட்டியது அமெரிக்காவின் Federal Aviation Administration (FAA).
இந்த 2.5 பில்லியன் டாலர் அபாரதத்தில் 243.6 மில்லியன் டாலர் கிரிமினல் குற்றத்திற்கான அபாரதமாகவும், 1.77 பில்லியன் டாலர் 737 MAX விமானங்களை வாங்கி ஏமாந்த வாடிக்கையாளர்களான விமானச் சேவை நிறுவனங்களுக்கும் 500 மில்லியன் டாலர் உயிரிழந்த 346 பேரின் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவிருக்கிறது. போயிங் ஏற்கெனவே 100 மில்லியன் டாலர் நிதியை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்குவதாக அறிவித்திருந்தது. பார்க்க பெரிய தொகை போல தெரிந்தாலும் போயிங்கின் ஆண்டு வருமானத்தில் இது ஒரு சிறு பகுதி மட்டுமே.