கவனிக்க வேண்டிய கருப்பை புற்றுநோய்.. பெண்கள் கட்டாயம் இதை படிங்க
கருப்பை புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது.
போதிய உடல் உழைப்பு இல்லாவிட்டாலோ, உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலோ கருப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ரத்தம் சரியாக சென்றடையாது. அதாவது உடல் இயக்க செயல்பாடு இல்லாவிட்டால் கருப்பை தசைகள் பலவீனமடைந்துவிடும்.
வறுத்த, பொரித்த உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாதது, மன அழுத்தத்தை எதிர்கொள்வது போன்றவையும் கருப்பையில் வீக்கம் ஏற்பட காரணமாக இருக்கின்றன.
ஆரம்ப நிலையில் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் இந்த நோயில் இருந்து மீண்டு விடலாம்.
எந்த வயதில் ஏற்படும்?
பொதுவாக மாதவிடாய் முடிவடையும் காலகட்டத்தில் கருப்பையில் வீக்கம் ஏற்படக்கூடும். குறிப்பாக 50 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களின் கருப்பையில் வீக்கம் தோன்றலாம்.
கருத்தரிக்கும் காலகட்டத்திலும் கருப்பையில் வீக்கம் தோன்றக் கூடும்.
அறிகுறிகள்
- கருப்பையில் ஏற்படும் அழற்சியும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
- வயிற்று பிடிப்பு
- மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்குடன் வலி
- அடிவயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு
- உடல் பலவீனம்
- இடுப்பை சுற்றி கொழுப்பு படிவது
- கால்வலி, வீக்கம்
- உடல் உறவின்போது கடுமையான வலி
வீட்டு வைத்தியங்கள்
- பழச்சாறு மற்றும் காய்கறிகளை சாறு எடுத்து பருகலாம். இவை கருப்பை வீக்கத்திற்கு நிவாரணமளிக்கும்.
- கருப்பையின் ஆரோக்கியத்திற்கு வேப்ப இலைகளை பயன்படுத்தலாம்.
- ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிதளவு இஞ்சியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து காபியாக தயாரித்து வாரத்தில் ஓரிருநாட்கள் பருகலாம்.
- இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பாலில் ஆளி விதைகளை சேர்த்து கொதிக்கவைத்தும் பருகலாம்.
- பாலில் மஞ்சள் கலந்து தினமும் இரண்டு வேளை பருகுவதும் நல்லது.
- பாதாம் பால் பருகுவதும் இதமளிக்கும்.
…
கவனிக்க வேண்டிய கருப்பை புற்றுநோய்.. பெண்கள் கட்டாயம் இதை படிங்க Source link