கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில இயற்கை வழிகள்
இன்று பல பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக கர்ப்பப்பை பிரச்சனை உள்ளது.
இதற்கு அடிக்கடி மாத்திரைகளை எடுப்பதும் முற்றிலும் தவறாகும். இதற்கேன சில எளிய இயற்கை மருத்துவங்களும் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்கலாம்.
- ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப்பை வீக்கம் குணமாகும்.
- ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
- கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பை தொந்தரவுகள் நீங்கும்.
- வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
- உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம்.
- இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது.
- சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது.
…
கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில இயற்கை வழிகள் Source link