இந்த உணவு பொருட்களையெல்லாம் நீரில் ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும்! கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் பல வகையான உணவுகள் உள்ளது.
சில வகை உணவுகளை நாம் பச்சையாக சாப்பிட்டால், அதன் முழு சத்துக்களையும் எளிதில் பெறலாம். இன்னும் சில வகை உணவுப் பொருட்களை நீரில் ஊற சாப்பிட்டால், இரு மடங்கு நன்மைகளைப் பெற்று விடலாம்.
அப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
வெந்தயம்
- வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலை சுத்தம் செய்ய பெரிதும் உதவிப் புரியும். மேலும் வெந்தயம் மலச்சிக்கலையும் சரிசெய்யக்கூடியன.
- ஆனால் வெந்தயத்தின் முழு நன்மையையும் பெற வேண்டுமானால், அதை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதே சிறந்தது.
- தினமும் இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை அரை டம்ளர் நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், நீருடன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்.
கசகசா
- வெள்ளை நிறத்தில் மிகவும் சிறியதாக இருக்கும் கசகசா சமையலில் பயன்படுத்தக்கூடிய ஓர் பொருளாகும். கசகசாவில் ஃபோலேட், தையமின் மற்றும் பேண்டோதெனிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.
- கசகசாவை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் லேசாக கையால் தேய்த்து நீருடன் அப்படியே சாப்பிடணும்.
- கசகசாவை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறது.
- முக்கியமாக நீரில் ஊற வைத்த கசகசாவானது, கொழுப்புக்களைக் கரைக்கக்கூடியது மற்றும் உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைக் குறைக்கும். மேலும் இது வயிற்றுப் போக்கைத் தடுத்து விடும்.
ஆளி விதை
- தற்போது மக்களிடையே ஆளி விதை சாப்பிடும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளன.
- எனவே சைவ உணவாளர்களுக்கு இது அசைவ உணவிற்கான ஒரு சிறந்த மாற்று உணவாக உள்ளது. அதிலும் ஆளி விதையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த ஆளி விதையை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
பாதாம்
- பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் நட்ஸ் தான் பாதாம். ஆனால் அந்த பாதாமை இன்னும் பலர் அப்படியே பச்சையாகத் தான் சாப்பிட்டு வருகிறார்கள்.
- உண்மையில் பாதாமை சாப்பிடும் ஆரோக்கியமான வழி என்றால், அது ஊற வைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
…
இந்த உணவு பொருட்களையெல்லாம் நீரில் ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும்! கிடைக்கும் நன்மைகள் ஏராளம்! Source link